حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّكَ نَاكِحٌ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعَلَى أُمِّ سَلَمَةَ لَوْ لَمْ أَنْكِحْ أُمَّ سَلَمَةَ مَا حَلَّتْ لِي، إِنَّ أَبَاهَا أَخِي مِنَ الرَّضَاعَةِ .
ஜைனப் பின்த் சலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம் ஹபீபா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நீங்கள் துர்ரா பின்த் அபூசலமாவை மணமுடிக்க விரும்புவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளை உம் சலமா (அவளுடைய தாயார்) (ரழி) அவர்களுடன் சேர்த்து மணமுடித்துக் கொள்ள முடியுமா? நான் உம் சலமா (ரழி) அவர்களை மணமுடிக்காமலிருந்தாலும்கூட, அவள் எனக்கு மணமுடிக்க ஹலாலாக இருக்க மாட்டாள். ஏனெனில் அவளுடைய தந்தை என்னுடைய பால்குடி சகோதரர் ஆவார்" என்று கூறினார்கள்.