இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1029 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ، بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَىْءٌ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ أَرْضَخَ مِمَّا يُدْخِلُ عَلَىَّ فَقَالَ ‏ ‏ ارْضَخِي مَا اسْتَطَعْتِ وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளான அஸ்மா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்கு (வீட்டுச் செலவுகளுக்காகக்) கொண்டு வந்து கொடுப்பதைத் தவிர என்னிடம் (சொந்தமாக) வேறு எதுவும் இல்லை. அவர் எனக்குக் கொண்டு வந்து கொடுப்பதிலிருந்து நான் (பிறருக்கு) வழங்கினால் என்மீது குற்றம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னால் இயன்றதை நீ வழங்கு; (பணப் பையை) முடிந்து வைத்துவிடாதே! (அப்படிச் செய்தால்,) அல்லாஹ்வும் உனக்கு (வழங்குவதை) முடிந்து விடுவான்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2551சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، عَنْ حَجَّاجٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَىْءٌ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ فِي أَنْ أَرْضَخَ مِمَّا يُدْخِلُ عَلَىَّ فَقَالَ ‏ ‏ ارْضَخِي مَا اسْتَطَعْتِ وَلاَ تُوكِي فَيُوكِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்குக் கொண்டு வருவதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அவர் கொண்டு வருவதிலிருந்து நான் சிறிதளவு கொடுத்தால் என் மீது ஏதேனும் குற்றம் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்; (கொடுக்காமல்) முடிந்து வைக்காதீர்கள். (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உமக்கு (வழங்குவதை) முடிந்து விடுவான்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)