இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

98ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ‏.‏
وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குறித்து நான் சாட்சியமளிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால் (ரழி) தம்முடன் இருக்க வெளியே வந்தார்கள். (தம் உரை) பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதி, அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்; மேலும் தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரழி) அவற்றைத் தம் ஆடையின் ஓரத்தில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1273சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ صَلَّى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَأَتَاهُنَّ فَذَكَّرَهُنَّ وَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ وَبِلاَلٌ قَائِلٌ بِيَدَيْهِ هَكَذَا فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْخُرْصَ وَالْخَاتَمَ وَالشَّىْءَ ‏.‏
அதா கூறினார்கள்:
“இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குத்பாவுக்கு முன் தொழுதார்கள், பின்னர் உரையாற்றினார்கள் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன். பெண்கள் கேட்கவில்லை என்று அவர்கள் கருதியதால், அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டி, உபதேசம் செய்து, தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். பிலால் (ரழி) அவர்கள் தமது கைகளை இவ்வாறு விரித்துக் கொண்டிருக்க, பெண்கள் தங்களின் காதணிகளையும், மோதிரங்களையும், மற்றும் பொருட்களையும் போடத் தொடங்கினார்கள்.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)