இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1627 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهْوَ ابْنُ الْحَارِثِ - عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ ثَلاَثَ لَيَالٍ إِلاَّ وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ ‏ ‏ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مَا مَرَّتْ عَلَىَّ لَيْلَةٌ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ إِلاَّ وَعِنْدِي وَصِيَّتِي ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மரண சாசனம் செய்ய ஏதேனும் பொருள் உடைய ஒரு முஸ்லிம், அது சம்பந்தமாக தனது மரண சாசனத்தைத் தம்முடன் எழுதி வைத்திருக்காமல் மூன்று இரவுகள்கூட (அதாவது, அதிகபட்சம் இரண்டு இரவுகளுக்கு மேல்) கழிப்பது முறையல்ல."

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதை நான் செவியுற்ற நாளிலிருந்து, எனது மரண சாசனம் என்னுடன் (எழுதப்பட்டு) இல்லாமல் நான் ஒரு இரவைக் கூடக் கழிக்கவில்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح