நான் கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் அபூ ஸலமா (ரழி) அவர்களின் பிள்ளைகளுக்காகச் செலவு செய்து, அவர்களை இன்னின்ன (அதாவது, ஏழ்மை) நிலையில் விட்டுவிடாமல், என் பிள்ளைகளைப் போல் கவனித்துக்கொண்டால் எனக்கு (மறுமையில்) நன்மை கிடைக்குமா?"
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஆம், நீர் அவர்களுக்காகச் செலவு செய்யும் தொகைக்கு உமக்கு நற்கூலி கிடைக்கும்."
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மகன்களுக்காக நான் செலவிட்டால் எனக்கு ஏதேனும் நற்கூலி கிடைக்குமா என்றும், மேலும் நான் அவர்களை இந்த (உதவியற்ற) நிலையில் கைவிடப் போவதில்லை (ஏனெனில் அவர்கள் என் மகன்களே) என்றும் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆம். நீ அவர்களுக்காகச் செலவிடுபவற்றிற்கு உனக்கு நற்கூலி உண்டு.
وعن أم سلمة رضي الله عنها قالت: قلت يارسول الله، هل لي أجر في بني أبي سلمة أن أنفق عليهم، ولست بتاركتهم هكذا وهكذا إنما هم بني؟ فقال: نعم لك أجر ما أنفقت عليهم ((متفق عليه)).
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அபூஸலமாவின் பிள்ளைகளுக்காக நான் செலவழித்தால் எனக்கு நற்கூலி கிடைக்குமா? (மக்கள் ஆதரவைத் தேடி) அவர்களை நான் கண்டபடி அலைய விடமுடியாது” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அவர்களுக்காகச் செலவழியுங்கள். அவர்களுக்காக நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொன்றிற்கும் உங்களுக்கு நற்கூலி உண்டு” என்று பதிலளித்தார்கள்.