நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு இவரைத் தவிர வேறு மகன்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்றார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "நீர் (நுஃமானுக்கு வழங்கியதைப் போன்று) அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கியுள்ளீரா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அநீதிக்கு நான் சாட்சி சொல்லமாட்டேன்" என்று கூறினார்கள்.