அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடையே (தமது நேரத்தை) சமமாகப் பங்கிட்டு வந்தார்கள். பிறகு, 'யா அல்லாஹ், இது என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் நான் செய்யும் பங்கீடாகும். ஆகவே, உன் கட்டுப்பாட்டில் உள்ளதும், என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதுமான விஷயத்திற்காக என்னைக் குற்றம் பிடித்துவிடாதே' என்று கூறுவார்கள்.