அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்: 'எவர் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி, (அதில்) கொல்லப்படுகிறாரோ, அவர் ஒரு ஷஹீத் ஆவார்.'
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி, கொல்லப்பட்டாரோ, அவர் ஷஹீத் ஆவார். யார் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகப் போராடி, கொல்லப்பட்டாரோ, அவர் ஷஹீத் ஆவார். யார் தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி, கொல்லப்பட்டாரோ, அவர் ஷஹீத் ஆவார்."