حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا فِيمَا اسْتَطَعْتَ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்களின் பேச்சைக்) கேட்டு (அவர்களுக்குக்) கீழ்ப்படிவோம் என்று விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தபோதெல்லாம், அவர்கள் எங்களுக்கு, "உங்களால் முடிந்த அளவுக்கு" என்று கூறுவார்கள்.
ஜரீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுடைய கட்டளைகளைச்) செவியேற்பதாகவும் அவற்றுக்குக் கீழ்ப்படிவதாகவும் பைஅத் செய்தேன். மேலும் நபி (ஸல்) அவர்கள், என்னுடைய சக்திக்கு எட்டிய வரையில் (செயல்படவும்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உளத்தூய்மையுடனும் நலம் நாடவும் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கட்டளைகளைக் கேட்டு கீழ்ப்படிவோம் என்று உறுதிமொழி எடுப்பது வழக்கம். அவர்கள் (ஸல்) எங்களிடம் (அந்த உறுதிமொழியில் இவ்வாறு கூறுமாறு) சொல்வார்கள்: என் சக்திக்குட்பட்ட வரையில்.