وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلاَّ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا " . قَالُوا إِنَّهَا مَيْتَةٌ . فَقَالَ " إِنَّمَا حَرُمَ أَكْلُهَا " .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மைமூனா (ரழி) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்டிருந்த ஒரு இறந்த ஆட்டைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள்) ஏன் அதன் தோலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (தோழர்கள்), "அது செத்த பிராணி (ஆச்சே)!" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "அதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது (அதன் தோலைப் பயன்படுத்துவது தடுக்கப்படவில்லை)" என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானுக்குரிய (ரமளான் மாதத்தின் இறுதியில் கொடுக்கப்படும்) ஃபித்ரா ஸகாத்தை மக்கள் மீது, ஒரு ஸாவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாவு வாற்கோதுமையாக, முஸ்லிம்களில் உள்ள ஒவ்வொரு சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவர் மீதும் கடமையாக்கினார்கள்.