حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي هِشَامُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَوْا عَلَيْهَا حَتَّى لَغِبُوا، فَسَعَيْتُ عَلَيْهَا حَتَّى أَخَذْتُهَا، فَجِئْتُ بِهَا إِلَى أَبِي طَلْحَةَ، فَبَعَثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِوَرِكِهَا وَفَخِذَيْهَا فَقَبِلَهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் ‘மர்ருழ் ளஹ்ரான்’ என்னுமிடத்தில் ஒரு முயலை (வேட்டையாடுவதற்காக) கிளப்பிவிட்டோம். அதன் பின்னால் (மக்கள்) ஓடிச் சோர்ந்து விட்டார்கள். நான் அதன் பின்னால் ஓடி, அதைப் பிடித்து அபூ தல்ஹா (ரலி) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு அதன் இடுப்புப் பகுதியையும், இரு தொடைகளையும் அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا وَنَحْنُ بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَخَذْتُهَا فَجِئْتُ بِهَا إِلَى أَبِي طَلْحَةَ فَذَبَحَهَا، فَبَعَثَ بِوَرِكَيْهَا ـ أَوْ قَالَ بِفَخِذَيْهَا ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَبِلَهَا.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மர்ருழ்-ழஹ்ரான் என்ற இடத்தில் ஒரு முயலைக் கிளப்பினோம். மக்கள் அதைத் துரத்திச் சோர்வடைந்தார்கள். பிறகு நான் அதைப் பிடித்து அபூ தல்ஹா (ரழி) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர் அதை அறுத்து, அதன் இடுப்புப் பகுதிகளையோ - அல்லது தொடைகளையோ - நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.