حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "சத்தியம் செய்வது (வியாபாரத்தில்), சரக்கை விற்பனையாகச் செய்யும்; ஆனால் பரக்கத்தை அழித்துவிடும்."
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரொருவர் ஒரு பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, பிறகு அம்மரத்தை விற்கிறாரோ, வாங்குபவர் (பழங்களும் தமக்கே வேண்டுமென) ஒரு நிபந்தனையை விதித்தாலன்றி, அம்மரத்தின் பழம் அதனை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியதாகும்.
ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்: "சத்தியம் செய்வது (பொய்யான உறுதிமொழிகள் மூலம்) வியாபாரப் பொருளை விற்பனையாகச் செய்யும்; (ஆனால் அதன்) இலாபத்தை அழித்துவிடும் (அதாவது, அதன் பரக்கத்தை நீக்கிவிடும்)."