அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மடு கட்டப்பட்ட (பால் கறக்கப்படாமல் மடுவில் தேக்கி வைக்கப்பட்ட) ஆட்டை வாங்கியவர் அதனுடன் திரும்பிச் செல்லட்டும், அதனைக் கறக்கட்டும், மேலும், அதன் பால் கறக்கும் அளவில் அவர் திருப்தியடைந்தால், அதனை அவர் வைத்துக் கொள்ளட்டும், இல்லையெனில், ஒரு ஸாவு பேரீச்சம்பழத்துடன் அதனைத் திருப்பிக் கொடுத்துவிடட்டும்.