அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மடு கட்டப்பட்ட ஆட்டை வாங்கியவர் அதனுடன் திரும்பிச் செல்லட்டும், அதனைக் கறக்கட்டும், மேலும், அதன் பாலில் அவர் திருப்தியடைந்தால், அதனை அவர் வைத்துக் கொள்ளட்டும், இல்லையெனில், ஒரு ஸாவு பேரீச்சம்பழத்துடன் அதனைத் திருப்பிக் கொடுத்துவிடட்டும்.