அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு நகரவாசி, ஒரு கிராமவாசிக்காக (அவரது பொருட்களை) விற்பனை செய்வது எங்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தது; அவர் (நகரவாசி) இவருடைய (கிராமவாசியின்) சகோதரராகவோ அல்லது தந்தையாகவோ இருந்தாலும் சரியே.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நகரவாசி ஒருவர் பாலைவனவாசி ஒருவருக்காக (அவர் கொண்டுவரும் பொருட்களை சந்தையில் விற்றுத் தருவது) எங்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தது.