இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘முஸாபனா’வைத் தடை செய்தார்கள். முஸாபனா என்பது, பேரீச்ச மரத்திலுள்ள (பழுக்காத அல்லது பழுத்த) கனிகளை, ‘அளவு அதிகமானால் எனக்குரியது; குறைந்தால் என் பொறுப்பு’ என்று (நிபந்தனையிட்டு), குறிப்பிட்ட அளவு உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக விற்பதாகும்.