وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّهُ كَانَ يُخْبِرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ حِينَ اسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً .
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், தங்கள் ஒட்டகம் (அவர்களைச் சுமந்துகொண்டு) நேராக நின்றபோது (ஹஜ் அல்லது உம்ராவிற்கான) தல்பியாவை ஓதினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், தங்களின் வாகனம் அவர்களைச் சுமந்து கொண்டு நேராக எழுந்து நின்றபோது தல்பியாவை (உரத்த குரலில்) கூறினார்கள்.