ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்களும் சஹ்ல் பின் அபீ ஹத்மா (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘முஸாபனா’வை -அதாவது (மரத்திலுள்ள) ஈரப் பேரீச்சம் பழங்களுக்குப் பகரமாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதை- தடை செய்தார்கள். ஆனால், ‘அராயா’ உடையவர்களுக்கு (மட்டும்) இதில் அனுமதியளித்தார்கள்.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'முஸாபனா'வை (அதாவது, மரத்திலுள்ள பழுக்காத அல்லது பழுத்த) கனிகளை (அதே இனத்தைச் சேர்ந்த) உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக (மதிப்பீடு செய்து) விற்பனை செய்வதை தடை செய்தார்கள்; 'அராயா' உடையவர்களைத் தவிர. ஏனெனில், அவர்களுக்கு (மட்டும்) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அபூ கத்தாதா அல்-அன்சாரி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
"வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது (சரக்கை) விற்கச் செய்யும்; பிறகு (பரக்கத்தை) அழித்துவிடும்."