இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2143ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ، وَكَانَ بَيْعًا يَتَبَايَعُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، كَانَ الرَّجُلُ يَبْتَاعُ الْجَزُورَ إِلَى أَنْ تُنْتَجَ النَّاقَةُ، ثُمَّ تُنْتَجُ الَّتِي فِي بَطْنِهَا‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹபல் அல்-ஹபலா' எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். அறியாமைக் காலத்தில் மக்களிடையே இந்த வியாபாரம் வழக்கத்தில் இருந்தது. (அதாவது) ஒருவர் அறுப்பதற்கான ஒட்டகத்தை வாங்குவார்; (அதற்கான விலையை) ஒரு குறிப்பிட்ட ஒட்டகம் குட்டி ஈன்று, பிறகு அதன் வயிற்றில் உள்ள குட்டியும் (வளர்ந்து) ஈன்ற பிறகு தருவதாகத் தவணை குறிப்பிடுவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح