حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا، فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَهُ الْمُبْتَاعُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு பேரீச்சை மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, பிறகு அதன் மரத்தை விற்றால், வாங்குபவர் அதன் கனிகள் தமக்கே உரியது என்று நிபந்தனையிட்டால் தவிர, அதன் கனிகள் (மகரந்தச் சேர்க்கை செய்த) அவருக்கே உரியதாகும்."
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரொருவர் ஒரு பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, பிறகு அம்மரத்தை விற்கிறாரோ, வாங்குபவர் (பழங்களும் தமக்கே வேண்டுமென) ஒரு நிபந்தனையை விதித்தாலன்றி, அம்மரத்தின் பழம் அதனை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியதாகும்.