இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
யார் உணவுப் பொருளை வாங்குகிறாரோ, அவர் அதைத் தாம் முழுமையாகக் கைவசப்படுத்தும் வரை விற்கலாகாது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (இந்த விதியைப் பொருத்தவரை) நான் எல்லாப் பொருட்களையும் உணவுப் பொருளைப் போலவே கருதுகிறேன்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு தானியத்தை வாங்கியவர், அதைத் தம் வசப்படுத்திக் கொள்ளும் வரை விற்கக் கூடாது.
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ .
யஹ்யா அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்: மாலிக் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு தீனார் அவர்களிடமிருந்தும், அப்துல்லாஹ் இப்னு தீனார் அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்தும் (பின்வருமாறு) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர், , அவர்கள் கூறினார்கள், "உணவுப் பொருளை வாங்கும் ஒருவர், அதை அவர் கைப்பற்றும் வரை விற்கக்கூடாது."