சயீத் இப்னு அல்-முஸய்யப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
அலி (ரழி) அவர்களும் உஸ்மான் (ரழி) அவர்களும் 'உஸ்ஃபான்' என்ற இடத்தில் சந்தித்தார்கள். அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் (ஹஜ் மாதங்களில்) தமத்துஃ (அதாவது உம்ரா செய்து இஹ்ராமிலிருந்து நீங்கி, பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது) அல்லது (தனிப்பட்ட) உம்ரா செய்வதைத் தடுத்து வந்தார்கள்.
அப்போது அலி (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு காரியத்தை நீங்கள் தடுக்கிறீர்களே! (இதன் மூலம்) நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள், "எங்களை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு அலி (ரழி) அவர்கள், "நான் உங்களை விட முடியாது" என்று கூறினார்கள்.
(உஸ்மான் (ரழி) அவர்கள் தடுப்பதை) அலி (ரழி) அவர்கள் கண்டபோது, அவ்விரண்டிற்கும் (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும்) சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள்.