حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ وَلاَ ذُو عَهْدٍ فِي عَهْدِهِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு நிராகரிப்பாளரைக் கொன்றதற்காக ஒரு நம்பிக்கையாளர் பழிக்குப் பழியாகக் கொல்லப்படக்கூடாது. மேலும், உடன்படிக்கை செய்தவர் (முஸ்லிம் ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் வாழும் முஸ்லிமல்லாதவர்) அவரது உடன்படிக்கைக் காலத்தில் (அவர் பாதுகாப்புடன் வாழும் காலத்தில்) கொல்லப்படக்கூடாது.”