இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். கடியுண்டவர் தனது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் (கடித்தவரின்) இரண்டு முன் பற்கள் விழுந்துவிட்டன. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று உங்களில் ஒருவர் தம் சகோதரரைக் கடிக்கிறாரே! உனக்கு நஷ்டஈடு (தியா) எதுவும் கிடையாது” என்று கூறினார்கள்.
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
யஃலா இப்னு முன்யா அல்லது இப்னு உமய்யா (ரழி) அவர்கள் ஒரு மனிதருடன் சண்டையிட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரின் கையைக் கடித்தார். (கடிக்கப்பட்டவர்) தம் கையை (கடித்தவரின்) வாயிலிருந்து உருவியெடுத்தபோது, (கடித்தவரின்) முன் பல் விழுந்துவிட்டது. (இப்னுல் முத்தன்னா என்ற அறிவிப்பாளர், 'அவரது இரண்டு முன் பற்கள் விழுந்துவிட்டன' என்றும் அறிவித்துள்ளார்.)
அவர்கள் தங்கள் வழக்கை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்கள், "ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று உங்களில் ஒருவர் கடிப்பாரா? அதற்குரிய நஷ்டஈடு ஏதுமில்லை" என்று கூறினார்கள்.