இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். கடியுண்டவர் தனது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் (கடித்தவரின்) இரண்டு முன் பற்கள் விழுந்துவிட்டன. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆண் ஒட்டகம் கடிப்பதைப் போன்று உங்களில் ஒருவர் தம் சகோதரரைக் கடிக்கிறாரே! உனக்கு நஷ்டஈடு (தியா) எதுவும் கிடையாது” என்று கூறினார்கள்.