அபூ ஸயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் இஸ்லாத்தை உளத்தூய்மையுடன் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவருடைய கடந்த கால பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். அதன்பிறகு (செயல்களுக்கான) பிரதிபலன் (கணக்கு) இருக்கும். அப்போது, அவருடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படும்; ஒரு தீய செயல், அல்லாஹ் அதை மன்னித்துவிட்டால் தவிர, அது உள்ளபடியே (ஒன்றுக்கு ஒன்றாக) பதிவு செய்யப்படும்."