அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஈமான் (இறைநம்பிக்கை) எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது, ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்ந்தது, பாதையிலிருந்துத் தொல்லை தருபவற்றை அகற்றுவதாகும். மேலும், வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்.”
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. அவற்றில் மிகவும் சிறந்தது 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இல்லை) என்பதாகும். அவற்றில் ஆகக் குறைந்தது, பாதையிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருளை அகற்றுவதாகும். வெட்கமும் (அல்-ஹயா) ஈமானின் ஒரு கிளையாகும்.'"
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. அவற்றில் மிகச் சிறந்தது, 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதாகும். அவற்றில் மிகச் சிறியது, சாலையிலிருந்து எலும்பை அகற்றுவதாகும். மேலும் வெட்கம் ஈமானின் ஒரு கிளை ஆகும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட -அல்லது எழுபதுக்கும் மேற்பட்ட- கிளைகளைக் கொண்டது. அவற்றில் மிகச் சிறந்தது 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை) என்பதாகும். அவற்றில் மிகக் குறைந்தது, பாதையிலிருந்துத் தீங்கு விளைவிப்பவற்றை அகற்றுவதாகும். நாணமும் ஈமானின் ஒரு கிளையாகும்."
التاسع: عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون، أو بضع وستون شعبة: فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் - அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் - உண்டு. அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' என்று பிரகடனம் செய்வதாகும்; அவற்றில் தாழ்ந்தது பாதையிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருளை அகற்றுவதாகும், மேலும் வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்."