நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அப்துல்லாஹ் (இப்னு உமர்) (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும்போது, நுழைந்தவுடன் தம் முகத்திற்கு நேராக நடந்து செல்வார்கள்; வாசலைத் தங்களுக்குப் பின்னால் ஆக்கிக்கொள்வார்கள். தமக்கும் தமக்கு எதிரே உள்ள சுவருக்குமிடையே ஏறத்தாழ மூன்று முழம் இருக்கும் வரை நடந்து சென்று, நபி (ஸல்) அவர்கள் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் தமக்குத் தெரிவித்த அந்த இடத்தைத் தேடி அங்கே தொழுவார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி மேலும்) கூறினார்கள்: "கஅபாவின் எப்பகுதியில் விரும்பினாலும் நம்மில் ஒருவர் தொழுவதில் குற்றமில்லை."