அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது, (அவர்கள் வந்ததும் செய்யும்) முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வத் மூலையைத் தொட்டதும், ஏழு சுற்றுகளில் மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்ததை நான் பார்த்தேன்.
ஸாலிம் (ரஹ்) அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தால், தவாஃப் செய்யத் தொடங்கும் போது முதலில் ஹஜருல் அஸ்வதைத் தொடுவார்கள். ஏழு சுற்றுகளில் மூன்று சுற்றுகள் (தோள்களை அசைத்து) வேகமாக நடப்பார்கள் (ரமல் செய்வார்கள்)."