இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2952சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُمَا الْيَمَانِيَ وَالْحَجَرَ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ ‏.‏
நாஃபிஃ அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் மூலை மற்றும் ஹஜருல் அஸ்வத் ஆகிய இந்த இரண்டு மூலைகளையும் தொடுவதை நான் கண்டதிலிருந்து, சிரமமாக இருந்தாலும் சரி, எளிதாக இருந்தாலும் சரி, இவற்றைத் தொடுவதை நான் விட்டதில்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)