حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ، مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"பிறருக்குப் பச்சை குத்திவிடும் பெண்களையும், பச்சை குத்திக்கொள்ளும் பெண்களையும், (அழகிற்காக) புருவ முடிகளைப் பிடுங்கி எடுக்கும் பெண்களையும், அழகிற்காகப் பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களையும் - (இவர்கள் அனைவரும்) அல்லாஹ் படைத்த அமைப்பை மாற்றிக்கொள்பவர்கள் - அல்லாஹ் சபிக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் (இதைப்பற்றிய கண்டனம்) உள்ளதையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?"