இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2085 iஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَابْنُ أَبِي خَلَفٍ، وَأَلْفَاظُهُمْ، مُتَقَارِبَةٌ
قَالُوا حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، يَقُولُ
أَمَرْتُ مُسْلِمَ بْنَ يَسَارٍ مَوْلَى نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ أَنْ يَسْأَلَ ابْنَ عُمَرَ، - قَالَ - وَأَنَا جَالِسٌ،
بَيْنَهُمَا أَسَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الَّذِي يَجُرُّ إِزَارَهُ مِنَ الْخُيَلاَءِ شَيْئًا قَالَ
سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏ ‏.‏
முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் கூறினார்:

நான், நாஃபிஃ பின் அப்துல் ஹாரித் அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையான முஸ்லிம் பின் யஸாரிடம், "பெருமையினால் தனது கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்பவரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றிருக்கிறீர்களா?" என்று இப்னு உமர் (ரழி) அவர்களிடம் கேட்குமாறு உத்தரவிட்டேன். அப்போது நான் அவ்விருவருக்கும் இடையில் அமர்ந்திருந்தேன்.

அதற்கு இப்னு உமர் (ரழி), "(அத்தகையோரை) மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح