அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பொய்யான) சத்தியம் செய்வதன் மூலம் ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக் கொண்டவருக்கு, அல்லாஹ் நரக நெருப்பை கட்டாயமாக்குவான் மேலும் சுவர்க்கத்தை அவருக்கு தடைசெய்வான். ஒருவர் அவரிடம் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே, அது மிக அற்பமான பொருளாக இருந்தாலும் கூடவா? அவர் (நபி (ஸல்) அவர்கள்) பதிலளித்தார்கள்: (ஆம்) அது அராக்கி மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் சரியே.