அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுபவர்களாக இருந்தார்கள்:
'அல்லாஹ்வே! நான் உன்னிடம் நான்கு விஷயங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்: பயனளிக்காத கல்வியிலிருந்தும், (உனக்கு) அஞ்சாத உள்ளத்திலிருந்தும், திருப்தியடையாத ஆன்மாவிலிருந்தும், (ஏற்றுக்கொள்ளப்பட்டு) செவியேற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும்.'