அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்: "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலபதித் தய்ன், வ ஃகலபத்தில் அதுவ்வி, வ ஷமாதத்தில் அஃதாஇ. (யா அல்லாஹ், கடன் (சுமை) என்னை மிகைத்து விடுவதிலிருந்தும், (ஒரு) எதிரி (என்னை) வென்று விடுவதிலிருந்தும், எதிரிகள் (என் துன்பத்தைக் கண்டு) கேலி செய்வதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)"