நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி, வல்அஜ்ஸி வல்கஸலி, வல்ஜுப்னி வல்புக்லி, வளலஇத் தைனி வகலபத்திர் ரிஜால்.”
“யா அல்லாஹ்! கவலையிலிருந்தும் (எதிர்காலத்தைப் பற்றிய), துக்கத்திலிருந்தும் (கடந்த காலத்தைப் பற்றிய), இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமை மிகைப்பதிலிருந்தும் (அதைச் செலுத்த முடியாமல் திணறுவதிலிருந்தும்), மனிதர்கள் என்னை மிகைப்பதிலிருந்தும் (அடக்கி ஆள்வதிலிருந்தும் அல்லது எதிரிகளால் தோற்கடிக்கப்படுவதிலிருந்தும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.”
(பொருள்: "இறைவா! சோம்பலிலிருந்து (நல்லறங்கள் செய்வதில் ஏற்படும் மந்தத்தன்மை) உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்; கோழைத்தனத்திலிருந்தும் (உண்மையைப் பேசுவதற்கும், கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அஞ்சும் நிலை) உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்; தள்ளாடும் முதிய வயதிலிருந்தும் (உடல் மற்றும் மன பலவீனத்தால் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை) உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்; கஞ்சத்தனத்திலிருந்தும் (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய மறுக்கும் குணம்) உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.")
முஸ்அப் பின் சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: சஅத் (ரழி) அவர்கள் (தமது மகன் முஸ்அப் ஆகிய) எனக்கு இந்த வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பவர்களாகவும், அவற்றை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களாகவும் இருந்தார்கள்: "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்-புக்லி, வ அஊது பிக மினல்-ஜுப்னி, வ அஊது பிக அன் உரத்த இலா அர்தலில்-உமுரி, வ அஊது பிக மின் ஃபித்னதித்-துன்யா வ அதாபில்- கப்ர் (அல்லாஹ்வே! கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; தள்ளாத வயது வரை (அதாவது, முதுமையின் காரணமாக அறிவையும் ஆற்றலையும் இழந்து பிறரைச் சார்ந்திருக்கும் நிலை வரை) நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; இவ்வுலகின் சோதனைகளிலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)"
அபுல் யஸார் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்து இவ்வாறு கூறுவார்கள்:
"அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹரமி, வத் தரத்தீ, வல் ஹத்மி, வல் கம்மி, வல் ஹரீக்கி, வல் கரக்கீ, வ அஊது பிக்க அன் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இந்தல் மவ்தி, வ அன் உக்தல ஃபீ ஸபீலிக்க முத்பிரன், வ அஊது பிக்க அன் அமூத லதீகா"
(அல்லாஹ்வே! தள்ளாமை (மற்றும் அதன் காரணமாக ஏற்படும் பலவீனங்கள்), உயரத்திலிருந்து வீழ்வது, இடிபாடுகளில் சிக்குவது, துக்கம், நெருப்பினால் எரிவது, நீரில் மூழ்குவது ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தடுமாறச் செய்வதிலிருந்தும் (ஈமானை இழக்கச் செய்வதிலிருந்தும்), உனது பாதையில் (போர்க்களத்தில்) புறமுதுகிட்டு ஓடும் நிலையில் கொல்லப்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். விஷ ஜந்து தீண்டி இறப்பதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)