அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் ஆட்கொள்வதிலிருந்தும், விதியின் கேட்டிலிருந்தும், எதிரிகள் (தமது துன்பத்தைக் கண்டு) களிப்பதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.
சுஃப்யான் அவர்கள் கூறினார்கள்: “இந்த ஹதீஸில் மூன்று விஷயங்கள் (மட்டுமே) இருந்தன; நான் ஒன்றைச் சேர்த்தேன். அது (இவற்றில்) எதுவென்று எனக்குத் தெரியாது.”
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எவர் அல்லாஹ்விடம் மூன்று முறை சுவர்க்கத்தைக் கேட்கிறாரோ, சுவர்க்கம் (தானாகவே): 'அல்லாஹும்ம அத்கில்ஹுல் ஜன்னஹ்' (யா அல்லாஹ்! இவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!) என்று கூறும். மேலும், எவர் நரகத்திலிருந்து மூன்று முறை பாதுகாப்புத் தேடுகிறாரோ, நரகம் (தானாகவே): 'அல்லாஹும்ம அஜிர்ஹு மினன் நார்' (யா அல்லாஹ்! இவரை நரகத்திலிருந்து காப்பாற்றுவாயாக!) என்று கூறும்.'