அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வே! இயலாமை (அசக்தி), சோம்பல், கஞ்சத்தனம் (உலோபித்தனம்), கோழைத்தனம், தள்ளாமை (முதுமைப் பிணி), கப்ரின் வேதனை, வாழ்வின் மற்றும் மரணத்தின் சோதனைகள் (சிரமங்கள்) ஆகியவற்றிலிருந்து நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."