அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கப்ரின் வேதனை பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுபவர்களாக இருந்தார்கள்:
(யா அல்லாஹ்! நான் உன்னிடம் சோம்பலில் இருந்தும், தள்ளாமையில் இருந்தும் (முதுமையின் பலவீனத்தில் இருந்தும்), கோழைத்தனத்தில் இருந்தும், கஞ்சத்தனத்தில் இருந்தும், தஜ்ஜாலின் சோதனையில் இருந்தும், கப்ரின் வேதனையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.)”
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைக் கூறி பாதுகாப்புத் தேடுவார்கள்: 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்-கஸலி, வல்-ஹரமி, வல்-ஜுப்னி, வல்-புக்லி, வ ஸூஇல்-கிபரி, வ ஃபித்னதித்-தஜ்ஜாலி, வ அதாபில்-கப்ரி (அல்லாஹ்வே, நான் உன்னிடம் சோம்பல், தள்ளாமை, கோழைத்தனம், கஞ்சத்தனம், மோசமான முதுமை, தஜ்ஜாலின் சோதனை மற்றும் கப்ருடைய வேதனை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.)'"