وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ مِنْ جَمْعٍ قَالَ فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் (ரழி) அவர்களை ‘ஜம்வு’ (முஸ்தலிஃபா)விலிருந்து (தமது வாகனத்தில்) தங்களுக்குப் பின்னால் அமரச் செய்தார்கள். மேலும், ஃபழ்ல் (ரழி) அவர்கள் தமக்குத் தெரிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா ஓதுவதை நிறுத்தவில்லை.
அல்-ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அவர் (அல்-ஃபழ்ல்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒட்டகத்தில்) சவாரி செய்து கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் (பெரிய) கல் எறியும் வரை தல்பியாவை ஓதிக்கொண்டே இருந்தார்கள்.