حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ، حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் ஒரு நயவஞ்சகன் ஆவான். அல்லது அவற்றில் ஏதேனும் ஒரு குணம் எவனிடம் உள்ளதோ, அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருக்கும். (அவை:) பேசினால் பொய் சொல்வான்; வாக்குறுதி அளித்தால் அதை மீறுவான்; உடன்படிக்கை செய்தால் துரோகம் செய்வான்; விவாதம் செய்தால் அக்கிரமம் செய்வான்."
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான்கு குணங்கள் உள்ளன; அவை யாவும் யாரிடம் இருக்கின்றனவோ அவர் ஒரு முழுமையான நயவஞ்சகர் ஆவார். மேலும், அவற்றில் ஒரு குணம் யாரிடம் இருக்கின்றதோ, அவர் அதை விட்டுவிடும் வரை அவரிடம் நயவஞ்சகத்தின் ஒரு குணம் இருக்கும். (அவை:) அவர் பேசும்போது பொய் சொல்வார்; உடன்படிக்கை செய்தால் துரோகம் செய்வார்; வாக்குறுதி அளித்தால் மாறு செய்வார்; விவாதம் செய்தால் வரம்பு மீறுவார்."
சுஃப்யான் அவர்களின் அறிவிப்பில், "அவரிடம் அப்பண்புகளில் ஒன்று இருந்தாலும், அவரிடம் நயவஞ்சகத்தின் ஒரு குணம் இருக்கும்" என்று உள்ளது.