இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2793சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحَرَ سَبْعَ بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا وَضَحَّى بِالْمَدِينَةِ بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டிருந்த ஏழு ஒட்டகங்களைத் தமது கையால் நஹ்ர் (கழுத்தில் குத்தி அறுக்கும் முறை) செய்தார்கள். மேலும் மதீனாவில், கொம்புகளுள்ள, கருப்பும் வெண்மையும் கலந்த நிறமுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் (குர்பானி) பலியிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)