حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحَرَ سَبْعَ بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا وَضَحَّى بِالْمَدِينَةِ بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டிருந்த ஏழு ஒட்டகங்களைத் தமது கையால் நஹ்ர் (கழுத்தில் குத்தி அறுக்கும் முறை) செய்தார்கள். மேலும் மதீனாவில், கொம்புகளுள்ள, கருப்பும் வெண்மையும் கலந்த நிறமுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் (குர்பானி) பலியிட்டார்கள்.