அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், பள்ளத்தாக்கின் அடிப்பகுதியிலிருந்து 'ஜம்ரதுல் அகபா'வின் மீது ஏழு கற்களை எறிந்தார்கள்; ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். (அப்போது) "மக்கள் பள்ளத்தாக்கின் மேலிருந்தல்லவா அதை எறிகிறார்கள்?" என்று அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இதுதான் எவர் மீது சூரா அல்-பகரா அருளப்பட்டதோ அ(ந்த நபிய)வர்களின் (செயல்பாட்டு) இடமாகும்" என்று கூறினார்கள்.