அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்து, மதீனாவின் சுவர்களைக் காணும்போது, தங்கள் பயண ஒட்டகத்தை வேகமாகச் செலுத்துவார்கள். வேறு ஏதேனும் வாகனத்தில் இருந்தால், அதையும் விரைவுபடுத்துவார்கள் – (இது) மதீனாவின் மீதான (அவர்களின்) அன்பின் காரணமாக (நடக்கும்).