இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1135ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ يَزِيدَ بْنِ أَبِي، عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، - رضى الله عنه - أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ يَوْمَ عَاشُورَاءَ فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ فِي النَّاسِ ‏ ‏ مَنْ كَانَ لَمْ يَصُمْ فَلْيَصُمْ وَمَنْ كَانَ أَكَلَ فَلْيُتِمَّ صِيَامَهُ إِلَى اللَّيْلِ ‏ ‏ ‏.‏
சலமா இப்னுல் அக்வா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை அனுப்பி, (அதுவரை) நோன்பு நோற்காதவர்கள் (அன்றைய தினம்) நோன்பு நோற்கும்படியும், (ஏற்கனவே) உணவு உண்டவர்கள் மாலை வரை (தமது) நோன்பை முழுமைப்படுத்தும்படியும் மக்களுக்கு அறிவிக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح