حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصْغِي إِلَىَّ رَأْسَهُ وَهْوَ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، فَأُرَجِّلُهُ وَأَنَا حَائِضٌ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது, தமது தலையை என்னிடம் (பள்ளிவாசலின் வாசலுக்கு வெளியே) சாய்ப்பார்கள். நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையிலேயே அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهُوَ مُعْتَكِفٌ فَيُنَاوِلُهَا رَأْسَهُ وَهِيَ فِي حُجْرَتِهَا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது, இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை சீவிவிடுவார்கள். அவர்கள் (ஆயிஷா ரழி) தங்களின் அறையில் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தலையை அவர்களிடம் நீட்டுவார்கள் (அவர்கள் சீவுவதற்காக).