حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصْغِي إِلَىَّ رَأْسَهُ وَهْوَ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، فَأُرَجِّلُهُ وَأَنَا حَائِضٌ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், பள்ளியில் இஃதிகாஃபில் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நாட்களில், தமது தலையை என்னிடம் நீட்டுவார்கள்; நான் அவர்களின் தலைமுடியை வாரி, எண்ணெய் பூசுவேன்.
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهُوَ مُعْتَكِفٌ فَيُنَاوِلُهَا رَأْسَهُ وَهِيَ فِي حُجْرَتِهَا .
ஆயிஷா (ரழி) அவர்கள், தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது, இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை வாரிவிடுவார்கள் என்று அறிவித்தார்கள். அவர்கள் தங்களின் அறையில் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தலையை அவர்களிடம் நீட்டுவார்கள்.