وعن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : "يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم". قالت: قلت: يارسول الله، كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم!؟ قال: "يخسف بأولهم وآخرهم، ثم يبعثون على نياتهم" ((متفق عليه. هذا لفظ البخاري)).
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை, உம்மு அப்தில்லாஹ் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு படை கஅபாவின் மீது படையெடுக்கும். அவர்கள் பூமியின் ஒரு வெட்டவெளியை (பாலைவனப் பகுதியை) அடைந்ததும், அவர்களில் முதலாமவர் முதல் இறுதியானவர் வரை அனைவரும் பூமியால் விழுங்கப்படுவார்கள்.”
(அதற்கு) நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் இறுதியானவர் வரை எவ்வாறு பூமியால் விழுங்கப்படுவார்கள்? அவர்களுக்கிடையே அவர்களுடைய கடைவீதிக்காரர்களும் (வியாபாரிகளும்), அவர்களில் (படையின் நோக்கத்துடன்) சேராதவர்களும் இருப்பார்களே!” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல் இறுதியானவர் வரை அனைவரும் பூமியால் விழுங்கப்படுவார்கள். பிறகு அவர்கள் தங்கள் எண்ணங்களுக்கேற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்” என்று கூறினார்கள்.
(நூல்: புகாரி மற்றும் முஸ்லிம். இது புகாரியின் வாசகமாகும்).