இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரொருவர் ஒரு பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, பிறகு அம்மரத்தை விற்கிறாரோ, வாங்குபவர் (பழங்களும் தமக்கே வேண்டுமென) ஒரு நிபந்தனையை விதித்தாலன்றி, அம்மரத்தின் பழம் அதனை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியதாகும்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த மனிதராவது ஒரு பேரீச்சை மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து பின்னர் அதன் அடிப்பகுதியை (மரத்தை) விற்றால், வாங்குபவர் (கனிகள் தனக்குரியவை என) நிபந்தனை விதித்தாலே தவிர, அந்த மரத்தின் கனிகள் மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியன."