அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாராவுடன் ஹிஜ்ரத் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஒரு ஊருக்குள் நுழைந்தனர். அங்கே (அநீதி இழைக்கும்) அரசர்களில் ஒரு அரசன் அல்லது கொடுங்கோலர்களில் ஒரு கொடுங்கோலன் இருந்தான். அவன் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குச் செய்தியனுப்பி, சாராவைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கூறினான். அவ்வாறே அவரும் அவளை அனுப்பி வைத்தார்.
அவன் அவளை நோக்கி எழுந்தான். உடனே சாரா (ரலி) அவர்கள் எழுந்து, உளூ (வுழு) செய்து தொழலானார். அவர்:
(யா அல்லாஹ்! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டவளாக இருந்தால், இந்த இறைமறுப்பாளனை என்மீது ஆதிக்கம் செலுத்த விட்டுவிடாதே!) என்று பிரார்த்தித்தார். உடனே அவன் (மூச்சுத் திணறல் ஏற்பட்டு) திணறடிக்கப்பட்டு, தன் காலால் உதைக்கலானான்.”