இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5501ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، يُخْبِرُ ابْنَ عُمَرَ أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّ جَارِيَةً لَهُمْ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأَبْصَرَتْ بِشَاةٍ مِنْ غَنَمِهَا مَوْتًا، فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا، فَقَالَ لأَهْلِهِ لاَ تَأْكُلُوا حَتَّى آتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَسْأَلَهُ، أَوْ حَتَّى أُرْسِلَ إِلَيْهِ مَنْ يَسْأَلُهُ‏.‏ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْ بَعَثَ إِلَيْهِ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِأَكْلِهَا‏.‏
கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்களுடைய ஓர் அடிமைப் பெண் ஸில்ஆ (மதீனாவுக்கு அருகிலுள்ள ஒரு மலை) எனும் இடத்தில் சில ஆடுகளை மேய்த்து வந்தாள். அவளுடைய ஆடுகளில் ஒன்று இறக்கும் தறுவாயில் இருந்ததைக் கண்டதும், அவள் ஒரு கல்லை உடைத்து அதைக் கொண்டு (அந்த ஆட்டை) அறுத்தாள். கஅப் (ரழி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்துக்) கேட்கும் வரை, அல்லது (அவர்களிடம் இது குறித்துக்) கேட்க ஒருவரை நான் அனுப்பும் வரை (அதிலிருந்து) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் (நேரில்) சென்றார்கள் அல்லது (கேட்பதற்காக) ஒருவரை அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை(ச் சாப்பிட) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح