حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ النَّفَقَةُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அடகு வைக்கப்பட்ட பிராணிக்குச் செய்யப்படும் செலவுக்கு ஈடாக அதில் சவாரி செய்யப்படலாம்; மேலும் (அடகு வைக்கப்பட்ட பிராணி) பால் கறப்பதாக இருந்தால், அதற்குச் செய்யப்படும் செலவுக்கு ஈடாக அதன் பாலைக் குடிக்கலாம். சவாரி செய்பவர் மற்றும் (பால்) அருந்துபவர் மீதுதான் (பிராணியின்) செலவு (பொறுப்பு) உள்ளது."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அடகு வைக்கப்பட்டிருக்கும் (கறவை) பிராணியின் பால், அதற்கான பராமரிப்புச் செலவுக்கு ஈடாகக் கறந்து கொள்ளப்படும். மேலும், அடகு வைக்கப்பட்டிருக்கும் (சவாரிப்) பிராணியின் முதுகில், அதற்கான பராமரிப்புச் செலவுக்கு ஈடாக சவாரி செய்யப்படும். சவாரி செய்பவரும், பாலைக் கறப்பவருமே அதற்கான பராமரிப்புச் செலவைச் செய்ய வேண்டும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அடகு வைக்கப்பட்ட சவாரிப் பிராணி மீது (அதன் பராமரிப்புச் செலவுக்குப் பகரமாக) சவாரி செய்யலாம். அடகு வைக்கப்பட்ட பால் தரும் பிராணியின் பாலை (அதன் பராமரிப்புச் செலவுக்குப் பகரமாக) அருந்தலாம். சவாரி செய்பவர் மற்றும் (பாலை) அருந்துபவர் மீதே அதன் பராமரிப்புச் செலவு உள்ளது."